திருவள்ளூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்பட 3ஆயிரம் கோடி ரூபாய்க்கான நல திட்ட உதவிகளை இன்று வழங்க இருக்கிறார் முதலமைச்சர்.! 

0 1936

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்பட 3ஆயிரம் கோடி ரூபாய்க்கான நல உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

சத்திரம்ஜெயபுரம் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு விழா நடைபெறுகிறது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் உதவி, கல்விக்கடன் உள்பட பல்வேறு பயனாளிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments